Monday, March 22, 2010
இன்று முத்தாரம் இதழ் அலுவலகம் முற்றுகை!
29/03/2010 தேதியிட்ட முத்தாரம் இதழில் முஹம்மது நபி என்ற தலைப்பில் கேலிச்சித்திரம் வரைந்து வெளியிட்டுள்ளனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களை தமது உயிரினும் மேலாக மதித்த போதும் அவர்களுக்கு சிலைவைப்பதையும் உருவமாக வரைவதையும் ஏற்றுக் கொள்வதில்லை.
நபிகள் நாயகத்திற்கு சிலைவைத்தாலோ, கார்ட்டூன் போட்டாலோ முஸ்லிம் சமுதாயம் தனது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தும் என்பது பாமர மக்களுக்கும் தெரிந்த உண்மை.
தெரிந்து கொண்டே முஸ்லிம்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக கார்ட்டூன் வரைந்ததற்காக முத்தாரம் இதழ் தனது சன் தொலைகாட்சி மூலம் மன்னிப்பு கேட்க வேண்டும். தவறினால் இன்று மாலை நான்கு மணிக்கு முத்தாரம் அலுவலகத்தை முஸ்லிம்கள் முற்றுகையிடுவார்கள்.
மேலும் நாளையதினம் தமிழகமெங்கும் தினகரன், குங்குமம், முத்தாரம் இதழ்களைத் தீவைத்துக் கொளுத்துவதுடன் மாநிலமெங்கும் உள்ள தினகரன் அலுவலகம் முற்றுகையிடப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment