Monday, March 15, 2010

தலைமைக்கழக செய்தி

1.

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமை மாநாடு
நாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010
இடம்: தீவுத் திடல் சென்னை
இந்திய விடுதலைக்காக முஸ்லிம்கள் சிந்திய ரத்தத்திற்கு ஏது ஈடு?
அந்தச் சமுதாயத்திற்கு இதுவரை இடஒதுக்கீடு தராதது வெட்கக் கேடு.
இனியும் தொடரலாமா இந்த மானக்கேடு.
ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையின்படி முஸ்லிம்களுக்கு 10% இடஒதுக்கீடு கோரி
சிங்கங்களாய் கர்ஜிக்க சமுதாயத் தங்கங்களே!
இப்போதே தயாராவீர்! பயணத்திற்கு முன்பதிவு செய்வீர்

2.
இந்திய விடுதலைக்கு முஸ்லிம்கள் சிந்திய ரத்தம் நூறு விழுக்காடு
இதற்குத் தண்டனையாக இந்திய அரசு பறித்தது நமது இடஒதுக்கீடு
இந்த அநியாயத்திற்கு முடிவு கட்டும் விதத்தில்
இரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரி
டி.என்.டி.ஜே. நடத்தும்
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமை மாநாடு
நாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010
இடம்: தீவுத் திடல் சென்னை
ஒடுக்கப்பட்ட சமுதாயமே! உரிமைக் குரல் எழுப்ப ஓடி வா!
ஒதுக்கப்பட்ட சமுதாயமே! ஒதுக்கீடு பெற ஒன்றிணைந்து வா!

2.
அரசியலில் ஓட்டுப் பொறுக்குவதிலும்
தேர்தலில் சீட்டுக் கேட்பதிலும்
நாட்டம் கொள்ளாத உங்களின் ஒரே அமைப்பு
உங்கள் நம்பிக்கை நட்சத்திரம்
உங்கள் உரிமைக் குரல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உங்களுக்காக மத்திய அரசுப் பணிகளில் 10 % இட ஒதுக்கீடு கோரி நடத்தும்
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமை மாநாடு
நாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010
இடம்: தீவுத் திடல் சென்னை
வெற்றியின் முகவரிகளே!
வங்கக் கடல் வழித்தடம் மாறியதோ என்று வியக்க தீவுத் திடலில் சங்கமிக்க வாரீர்!
ஒரு சரித்திரம் படைக்க வாரீர்!

3. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமை மாநாடு
நாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010
இடம்: தீவுத் திடல் சென்னை
குடந்தையை குலுங்கச் செய்த பேரணி கண்டு
தமிழகத்தை உலுக்கிய சிறை நிரப்பும் போராட்டம் கண்டு,
மாநிலத்தில் 3.5 % இட ஒதுக்கீடு பெற்றுத் தந்த உங்கள் அபிமான அமைப்பு
மத்தியில் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைப்படி 10 % இட ஒதுக்கீடு பெற்றுத் தர
இம்மாநாட்டிற்குக்குக் குடும்பத்துடன் வர உங்களை அன்புடன் அழைக்கின்றது.
இட ஒதுக்கீடு மத்தியில் சட்டமாக!
திரள்வோம் தீவுத் திடலில் சமுத்திரமாக!

4.
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமை மாநாடு
நாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010
இடம்: தீவுத் திடல் சென்னை
சமுதாய நலனையே தனது நலனாய் கொண்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மத்திய அரசின் கல்வி, வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 % இடஒதுக்கீடு பெறுவதற்காக நடத்தும் கோரிக்கை மாநாட்டிற்கு முஸ்லிம்களே குழந்தைகளுடன் வாரீர்! குடும்பத்துடன் வாரீர்!
தலைநகர் டெல்லியில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு சட்டமாக!
தலைநகர் சென்னையில் திரள்வோம் சமுத்திரமாக! சரித்திரமாக!

5.
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமை மாநாடு
நாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010
இடம்: தீவுத் திடல் சென்னை
திருப்புமுனையாகட்டும் தீவுத்திடல் மாநாடு!
தில்லி நாடாளுமன்றத்தில் சட்டமாகட்டும் இடஒதுக்கீடு!
அன்று மாநிலத்தில் முஸ்லிம்களுக்காக
நின்று போராடி 3.5% இட ஒதுக்கீட்டை
வென்று காட்டிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
இன்று மத்தியில் 10% இடஒதுக்கீட்டைப் பெற அழைக்கிறது
முஸ்லிம் சமுதாயமே!
வங்கக் கடலுக்கு இணையாய்
சங்கமிப்போம் தீவுத் திடலில்!
ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரையை
சட்டமாக்குவோம் நாடாளுமன்ற அவையில்!

6. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமை மாநாடு
நாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010
இடம்: தீவுத் திடல் சென்னை
வெள்ளையன் அளித்த இடஒதுக்கீட்டை
விடுதலைப்போரில் வீசியெறிந்தது நம் சமுதாயம்
இது முஸ்லிம்களின் தேசாபிமானம்!
விடுதலைக்குப் பின் அந்த இடஒதுக்கீட்டை
பிடுங்கி எறிந்தது இந்திய அரசாங்கம்
இது இந்த தேசத்திற்கே அவமானம்
இன்னும் தொடரலாமா இந்தத் துரோகம்!
முஸ்லிம் சமுதாயமே
தீவுத் திடலுக்கு விரைவீர்!
திருப்புமுனை காண்பீர்

7.
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமை மாநாடு
நாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010
இடம்: தீவுத் திடல் சென்னை
கிடப்பில் கிடக்கும் ரங்கநாத் அறிக்கை
குப்பையில் போகாமல் தடுக்க
நடப்பு நாடாளுமன்றத் தொடரிலேயே
நமக்கு அது சட்டமாக
குழுமுவோம் தீவுத் திடலில்
குவித்திடுவோம் வெற்றியை!

8.
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமை மாநாடு
நாள்: இன்ஷா அல்லாஹ் ஜூலை 4, 2010
இடம்: தீவுத் திடல் சென்னை
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் ரணகளமானது நாடாளுமன்றம்
ஆனாலும் போராடி நிறைவேற்றியது மன்மோகன் அரசாங்கம்
ரங்கநாத் பரிந்துரையை நிறைவேற்ற மட்டும் கருத்தொற்றுமை வேண்டுமாம்
கருத்தொற்றுமை என்பது கல்லில் நார் உரிப்பதாகும்
கனியட்டும் காலம் என்பது இலவு காத்த கிளியாகும்
பிரதமரின் பிரமாத பேச்சில் ஏமாற மாட்டோம்
இட ஒதுக்கீட்டை இழக்க மாட்டோம் என்று பறைசாற்ற
தீவுத்திடலில் கூடுவோம்
திருப்புமுனையை உருவாக்குவோம்.

No comments: