Saturday, June 26, 2010

10% இட ஒதுக்கீடு தரும் கட்சிகளுக்கே ஓட்டு-தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்

நெல்லை: முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் இட ஓதுக்கீடு தரும் கட்சிகளுக்கே வாக்களிக்கப்படும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் ஜைனுல் ஆபிதீன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

பாபர் மசூதி இடிப்பு சம்பவத்திற்கு பிறகு வட இந்திய முஸ்லிம்கள் காங்கிரசுக்கு வாக்களிப்பதில்லை. இதனால் அக்கட்சியின் பலம் குறைந்துவிட்டது.

இதனால் கடந்த 2004ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அக்கட்சி தனது தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு தனி இடஓதுக்கீடு அளிக்கப்படும் என அறிவித்தது. ஆனால் அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்டவில்லை.

இந்நிலையில் இடஓதுக்கீட்டுக்காக அமைக்கப்பட்ட ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஓதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. ஆனால் அந்த அறிக்கையை நிறைவேற்றாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது.

இடஓதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி ஜூலை 4ல் சென்னை தீவுத்திடலில் பேரணி மற்றும் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 10 சதவீத இடஓதுக்கீடு அளிக்கும் கட்சிகளுக்கு வாக்களிப்பது என முடிவு எடுக்கப்பட உள்ளது.

மாநாட்டிற்கு அனைத்து தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் பார்வையாளராக மட்டுமே கலந்து கொள்ள முடியும். பேசுவதற்கு யாருக்கும் வாய்ப்பு அளிக்கப்படமாட்டாது. தவ்ஹீத் ஜமாத் ஒருபோதும் அரசியல் கட்சியாக மாறாது என்றார் அவர்.

மாநாட்டுப் பணிகளுக்கு வாரி வழங்குவீர்!

தலைமைகழக செய்தி

எதிர் வரும் ஜூலை 4ல் சென்னை தீவுத் திடலில் நடைபெற இருக்கும் மாபெரும் மாநில மாநாடு பற்றி நாம் அறி வோம். மத்திய அரசுப் பணிகளில் முஸ்லிம்ளுக்கு மிஸ்ரா கமிஷன் அறிக்கையின் பரிந்துரையின்படி 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கக் கோருவதே மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.

இந்த ‘ஒடுக்கப்பட்டோரின் உரிமைப் பேரணி & மாநாடு’ சிறப்புற நடக்க தகுந்த பொருளாதார வசதிகள் தேவை. எனவே நீங்களும் உங்களது சக்திக்கேற்ப நிதியுதவி அளித்து இந்த சிறப்பான நிகழ்ச்சி மேலும் சிறப்பாக அமைவதற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இதுவரை இல்லாத அளவுக்கு பல லட்சங்களில் திடல் வாடகை.

குடி தண்ணீர் பிரச்சினை இல்லாத அளவுக்கு மண்டபங்களிலும், மாநாட்டுத் திடலிலும் இலவசமாக குடிநீர் பாக்கெட்டுகள்.

மனிதனின் அத்தியாவசிய அவசரத் தேவையை தங்கு தடையின்றி நிறைவேற்றிட நடமாடும் கழிவறை.

ஆயிரக்கணக்கான ரூபாய் வாடகையில் ரெமேட் கழிவறை மற்றும் திடலிலேயே நிரந்தரக் கழிவறை, வரிசையில் காத்திருக்காமல் சிறுநீர் கழிக்க அறைகள்.

கழிவறை மற்றும் உளூ போன்றவற்றிற்கு திடலிலேயே நிரந்தரத் நீர்த் தொட்டியல்லாமல் மெட்ரோ வாட்டர் நிரப்பப்பட்ட 200 மீட்டர் இடைவெளியில் ஒரு டேங்.

லட்கக்கணக்கான மக்களின் உணவு, குடிபானம் மற்றும் இதரவற்றை பூர்த்தி செய்வ தற்காக 100க்கும் மேற்பட்ட பிரியாணி, சாப்பாடு, டிபன், டீ, ஸ்நாக்ஸ், ஜூஸ், வாட்டர், இஸ்லாமிய புத்தகங்கள், புர்கா, சி.டி., டி.வி.டி., ஸ்டால்கள் அனைத்தும் வாடகையில்லாமல்.

பஸ், வேன், ரயில் மார்க்கமாக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா போன்ற இந்தியாவின் பல பாகங்களிலிருந்து மாநாட்டுக்கு வருகை தரும் லட்சக்கணக்கான மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து ஓய்வெடுத்து விட்டு பேரணிக்கு வருவதற்கு வசதியாக பல லட்சங்கள் வாடகையில் 100க்கும் மேற்பட்ட மண்டபங்கள் மற்றும் மர்கஸ்கள்.

லட்சக்கணக்கானோர் மாநாட்டிற்கு வருகை தந்து அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளை பார்க்க முடியாமல் ஏமாற்றமடைந்து விடக் கூடாது என்பதற்காக அனைவரும் காணும் வகையில் LED (14-8 அடி, 17-10 அடி) அமைத்தல்.

மத்தியில் இடஒதுக்கீட்டைக் கேட்டுப் பெறுவதால் முன் எப்போதும் இல்லாத வகையில் தேசிய ஹிந்து, ஆங்கிலம், உருது, தமிழ் நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் பல லட்சம் ரூபாய் செலவில் விளம்பரங்கள்.

நடைபெறும் பேரணி & மாநாடு அனைத்தையும் ஒளிபரப்பத்தக்கவாறு தரமான ஒளி, ஒலி பதிவு.

மண்டபங்கள், போக்குவரத்து, பேரணி, மாநாட்டுத் திடல் போன்றவற்றில் சேவை செய்வதற்காக பல நூற்றுக்கணக்கான சீருடை அணிந்த தொண்டர்கள்.

பேரணி, மாநாட்டிற்கு லட்சக்கணக்கான மக்கள் வருவதால் அவர்ளுக்கு ஏற்படும் அவசர உதவிக்குத் தேவையான இலவச மருத்துவ மையங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள்.

வெளிநாடு வாழ் தமிழ் நெஞ்சங்கள் நாமும் மாநாட்டில் பங்கெடுக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தை போக்க www.tntj.net மற்றும் www.onlinepj.com போன்ற இணைய தளங்கள் மூலம் நேரடி ஒளிபரப்பு.

அல்லாஹ்வுக்கு அடுத்து நம்மை நம்பி வரும் மக்கள் பாதுகாப்பாக நிகழ்ச்சியில் பங்கெடுத்து வீடு திரும்புவதற்கு வசதியாக பாது காப்பு ஏற்பாடுகள்.

முன்னெச்சரிக்கை ஏற்பாடாக போதிய காவல்துறை கண்காணிப்புக்கு ஏற்பாடு.

எனவே உங்கள் பொருளாதார உதவிகளை பணமாகவோ அல்லது வங்கி வரைவோலைகளாகவோ பின்வரும் முகவரிக்கு அனுப்பி ரசீது பெற்றுக் கொள்ளலாம்.

வங்கி கணக்கு விபரம் :
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், வங்கி கணக்கு எண். 788274827,
இந்தியன் வங்கி, மண்ணடி கிளை, சென்னை லி 01

அனுப்ப வேண்டிய முகவரி :
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், 30, அரண்மனைக்காரன் தெரு,
மண்ணடி, சென்னை – 01. போன் : 044 – 2521 5226, செல் : 99520 56555