Tuesday, July 6, 2010

பிரதமர் மற்றும் சோனியாவை சந்தித்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் இடஒதுக்கீடுக்காக போராட்டத்தில்  இலட்சக்கணக்கான  மக்கள் வெள்ளத்தில் சென்னை திக்குமுக்காடிப்போனது. இந்த போராட்டத்தின் விளைவாக முஸ்லிம்களின் இடஒதுக்கீடு சம்பந்தமாக விளக்கம் கேட்டு பிரதமர் மன்மோன் சிங் அழைத்ததன் அடிப்படையில் சகோ. பி.ஜைனுலாப்தீன், சகோ. ஷம்சுல்லுஹா, சகோ. அப்துல்ஹமீது, சகோ. கோவை ரஹ்மதுல்லாஹ் ஆகியோர் டெல்லி சென்றனர். ன்று (06-07-2010) காலை மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தி ஆகிய இருவரையும் சந்தித்து இடஒதுக்கீடு சம்பந்தமாக விளக்கமளித்தனர். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

ஜுலை 4 மாநாடு சம்பந்தமாக எடுபடாத வாதங்கள்.....

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நேற்றைய தினம் மக்கள் வெள்ளத்தில் மிதந்த சென்னை மாநகரில் ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்...

இந்த மாநாடடிற்கு மக்கள் கூட்டம் வராமல் தடுப்பதற்காக பாப்புலர் ஃபிரண்ட் இந்தியா, ஷம்சுதீன் காசிமி (இட ஒதுக்கீட்டிற்காக ஜெயலலிதாவை சந்தித்தவர்), ஜாக், அபூ அப்துல்லாஹ் மற்றும் மிகக் கேவலமான முறையில் செயல்பட்ட பொய்யன் பாக்கர் கூட்டத்தினர் இவர்களின் செயல்பாடுகளை தோலுரித்து சகோ. பிஜே அவர்களது இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள் அதனைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்