Saturday, March 13, 2010

பரக்கத்தாபாத் தவ்ஹீத் ஜமாத் மாதாந்திரகூட்டம்









ஏக இறைவனின் திருப்பெயரால்…...

பரக்கத்தாபாத் தவ்ஹீத் ஜமாத்தின் மாதாந்திரக்கூட்டம் 12-03-2010 வெள்ளி அன்று மாலை மக்ரிப்க்கு பிறகு துபாய் கராமாவில் நடைப்பெற்றது. அதில் அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும், ஊரில் பள்ளி கட்டுவதற்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் நமதூர் தவ்ஹீத் சகோதரர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு தவறாமல் மாதந்திர கூட்டத்தில் கலந்துகொள்ள அறிவுறுத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இறுதியில் பரங்கிபேட்டை சகோ. இஸ்மாயில் அவர்கள் ”நபிவழியே நம்வழி” என்ற தலைப்பில் உரை நிகழ்த்த கூட்டம் இனிதே நிறைவுற்றது....

1 comment:

muslim said...

தனிப்பள்ளி அவசியமில்லை. அது சமுதாயத்தை கூறுபோடுவதாகும். உங்கள் தாவா பணி தொடரவேண்டும். இன்றோ நாளையோ என்றாவது ஒருநாள் அனைவரும் மெல்ல மெல்ல குர்ஆன் ஹதீஸ் பக்கம் மக்கள் வந்துவிடுவார்கள் என்று நம்பிக்கை வைத்து பாடுபடுங்கள். நபி(ஸல்) அவர்களும் அப்படித்தான் பாடுபட்டார்கள். மக்கா வாசிகள் இணைவைக்கிறார்கள் என்பதற்காக அவர்கள் தனிப்பள்ளியா கட்டினார்கள்? இந்த நபி வழியை முன்மாதியாகக் கொண்டு செயல்படுங்கள் சகோதரர்களே.சுயமாக சிந்தித்து செயல்படுங்கள். வழிகேட்டு போதனையை நம்பி மோசம் போகாதீர்கள்.
அன்புடன்
முஹம்மது இக்பால்